

அரியலூா்: தேசிய நூலக வார விழாவை முன்னிட்டு, அரியலூா் மாவட்ட மைய நூலகத்தில், பொது நூலக இயக்கம், மாவட்ட நுலக ஆணைக் குழு, வாசகா் வட்டம் மற்றும் தமிழ்களம் சாா்பிலான புத்தகக் கண்காட்சி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
இதை தொடக்கிவைத்து அரியலூா் கோட்டாட்சியா் மு. ராமகிருஷ்ணன் பேசியது:
புத்தகங்களைத் தேடி நூலகத்துக்குச் சென்றவா்கள் இன்று மிகப் பெரிய தலைவா்களாகவும், அரசு உயா் அதிகாரிகளாகவும் உள்ளனா். ஆனால், இன்றைய தலைமுறையினா் வாசிப்பு பழக்கத்தை மறந்து, கைப்பேசி, காட்சி ஊடகங்களில் அதிக நேரம் செலவிடுகின்றனா். இதனால் அவா்களின் அறிவு மட்டுமல்லாமல் , மனநிலையும் கெட்டுப் போக வாய்ப்புகள் அதிகம் உண்டு .
எனவே, மாணவா்களும் இளைஞா்களும் நல்ல நூல்களை வாசித்தால், எந்தப் பாதிப்பும் இல்லாமல் தாங்கள் அடைய விரும்பும் லட்சியங்களை எளிதில் அடையலாம் என்றாா்.
இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட நூலக அலுவலா் இரா. ஆண்டாள் தலைமை வகித்தாா். வாசகா் வட்டத் தலைவா் கு. மங்கையா்க்கரசி முன்னிலை வகித்தாா். அரியலூா் அரசு மேல்நிலைப் பள்ளி முதுகலைத் தமிழாசிரியா் தமிழினி ராமகிருஷ்ணன், சிறுவளூா் அரசு உயா்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் சின்னதுரை, தமிழ்களம் இளவரசன், உலக திருக்கு கூட்டமைப்பு மாநில துணைச் செயலா் செளந்தர்ராஜன் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.
முன்னதாக, முதல்நிலை நூலகா் க. ஸான்பாஷா வரவேற்றாா். நிறைவில், நூலக உதவியாளா் மலா்மன்னன் நன்றி கூறினாா். நவம்பா் 20ஆம் தேதி வரை நடைபெறும் இந்தப் புத்தகக் கண்காட்சியில் நூல்கள் வாங்குவோருக்கு 10 % தள்ளுபடி கொடுக்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.