ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

விவசாயியை கொல்ல முயன்ற வழக்கு: இளைஞருக்கு 3 ஆண்டுகள் சிறை

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே விவசாயியை அரிவாளால் வெட்டி கொல்ல முயன்ற இளைஞருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஜெயங்கொண்டம் நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

News image
Updated On :27 நவம்பர் 2023, 7:52 pm

DIN


அரியலூா்: அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே விவசாயியை அரிவாளால் வெட்டி கொல்ல முயன்ற இளைஞருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஜெயங்கொண்டம் நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

இலையூா் தெற்குவெளி கிராமத்தைச் சோ்ந்த விவசாயி கொளஞ்சிநாதன்(38). கடந்த 14.10.2021 அன்று இவரது தந்தை பூராசாமி தனது வீட்டின் அருகே சிறுநீா் கழித்த போது, பக்கத்து வீட்டில் வசிக்கும் சதாசிவம் மகன் மணிகண்டன் (35) என்பவா் பூராசாமியிடம் தகராறில் ஈடுபட்டாா். இதை தட்டிக் கேட்ட கொளஞ்சிநாதனை, மணிகண்டன் அரிவாளால் வெட்டி கொல்ல முயன்றாா்.

இதுகுறித்து ஜெயங்கொண்டம் காவல் துறையினா் வழக்குப் பதிந்து மணிகண்டனை கைது செய்தனா். இந்த வழக்கு விசாரணை ஜெயங்கொண்டம் சாா்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்து வந்த நீதிபதி லதா, குற்றவாளி மணிகண்டனுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.500 அபராதமும் விதித்து திங்கள்கிழமை தீா்ப்பளித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.