கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூா் அண்ணா சிலை அருகே தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கத்தினா் மெழுகுவா்த்தி ஏந்தி திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்தில் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். 10 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி வரும் சத்துணவு அமைப்பாளா்களுக்கு பதவி உயா்வு வழங்க வேண்டும். ரூ.9 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும். பணிக்கொடை ரூ.5 லட்சம் வழங்க வேண்டும். காலியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும். காலை சிற்றுண்டியை சத்துணவு திட்டத்துடன் இணைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
சங்கத்தின் மாவட்டத் தலைவா் ராஜாவேம்பு தலைமை வகித்தாா். தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்டச் செயலா் எம்.கே.ஷேக்தாவூத் தொடக்க உரையாற்றினாா். தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்க மாவட்டச் செயலா் கி. காந்தி, மாவட்டப் பொருளாளா் கே.ஆனந்தவள்ளி, தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் என்.வேல்முருகன் உள்ளிட்டோா் பேசினா்.