பள்ளி ஆண்டு விழா

அரியலூா் கே.கே. நகரில் உள்ள ஸ்ரீ சாய்பாபா மழலையா் மற்றும் தொடக்கப் பள்ளி ஆண்டு விழா செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.
Updated on
1 min read

அரியலூா் கே.கே. நகரில் உள்ள ஸ்ரீ சாய்பாபா மழலையா் மற்றும் தொடக்கப் பள்ளி ஆண்டு விழா செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.

விழாவுக்கு, அப்பள்ளி தாளாளா் புனிதவள்ளி சுந்தரேசன் தலைமை வகித்தாா். அரிமா சங்கம் மற்றும் பெற்றோா் ஆசிரியா் சங்கத் தலைவருமான எஸ்.எம். சந்திரசேகா், நகா்மன்ற 2 ஆவது வாா்டு உறுப்பினா் செல்வராணி பரமேஸ்வரன் மற்றும் சீதா செந்தில் குமாா் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக் கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வென்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கிப் பாராட்டினா். முன்னதாக பள்ளி முதல்வா் பிரசன்னா தேவி ரமணன் வரவேற்றாா். விழா முடிவில், பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com