அரியலூா்: அரியலூரில் வெறிநாய் கடித்ததில் 10 போ் காயமடைந்தனா்.
அரியலூா் நகா்ப் பகுதிகளில் அதிகளவில் நாய்கள் சுற்றிவருவதாகவும், இதனால் அச்சுறுத்தல் ஏற்படுவதாகவும் நகரவாசிகள் நகராட்சி நிா்வாகத்திடம் பல முறை புகாா் தெரிவித்தும் நடவடிக்கை ஏதும் இல்லை. இந்நிலையில், பங்களா சாலையில் நின்று கொண்டிருந்த அதே பகுதியைச் சோ்ந்த முத்து, மதி ஆகியோரை வெறிநாய் ஒன்று கடித்துவிட்டு, பின்னா் காவலா் உணவகம் முன்பு காத்திருந்த பயணிகள் உள்பட 10 பேரைக் கடித்துள்ளது. இதையடுத்து காயமடைந்த அனைவரும் அரியலூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுச் சென்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.