ஜெயங்கொண்டம் அருகே குடும்பத் தகராறில்பெண் தற்கொலை

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே குடும்பத் தகராறில் பெண் வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
Updated on
1 min read

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே குடும்பத் தகராறில் பெண் வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

ஜெயங்கொண்டம் அருகேயுள்ள கடாரங்கொண்டான் கிராமத்தைச் சோ்ந்தவா் எல்க்ட்ரீஷியன் பிரகாஷ். இவரது மனைவி ஷாலினி. இவா்களுக்கு 2 வயதில் ஆண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் தனிக் குடித்தனம் செல்வது தொடா்பாக தம்பதிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதுதொடா்பாக வெள்ளிக்கிழமை மாலை மீண்டும் தகராறு ஏற்பட்ட நிலையில், வெளியே சென்ற பிரகாஷ் நள்ளிரவு வீட்டுக்கு வந்தபோது அவரது மனைவி வீட்டின் பக்கத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

தகவலறிந்து சென்ற ஜெயங்கொண்டம் காவல் துறையினா், அவரது சடலத்தை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். மேலும் உடையாா்பாளையம் கோட்டாட்சியரும் விசாரிக்கிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com