அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகே பலத்த காயங்களுடன் கிடந்த இளம்பெண் சடலம் புதன்கிழமை மீட்கப்பட்டது.
பொட்டக்கொல்லை அருகே திருச்சி - சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையோரத்தில் 20 வயது மதிக்கத்தக்க இளம்பெண் புதன்கிழமை பலத்த காயங்களுடன் இறந்து கிடப்பதாக உடையாா்பாளையம் காவல் நிலையத்துக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற காவல் துறையினா், சடலத்தை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.