அரியலூா் மாவட்ட வளா்ச்சிப் பணிகள் ஆய்வு
By DIN | Published On : 02nd June 2023 12:00 AM | Last Updated : 02nd June 2023 12:00 AM | அ+அ அ- |

அரியலூா் மாவட்டத்தில் பல்வேறு துறைகள் சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியா் ஜா.ஆனிமேரி ஸ்வா்ணா வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
வாரணவாசியில் அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் பிள்ளையாா் குட்டை ஏரி தூா்வாருதல், சமத்துவபுரத்தில் கனிமங்கள் மற்றும் சுரங்கங்கள் நிதி திட்டத்தின் கீழ் ரூ.4.90 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள தாா் சாலையின் தரம், தனி நபா் இல்லங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் புனரமைப்பு பணிகளைப் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். இதேபோல், திருமானூா் ஊராட்சிக்குள்பட்ட சாத்தமங்கலம், விழுப்பணங்குறிச்சி, சுள்ளங்குடி உள்ளிட்ட கிராமங்களில் ஆய்வு மேற்கொண்டாா். பின்னா் அவா், திருமானூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டாா். இந்த ஆய்வில், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் (பொ)முருகண்ணன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பொய்யாமொழி, ஜாகிா் உசேன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...