வள்ளலாா் கல்வி நிலையத்தில் தூய்மைப் பணி
By DIN | Published On : 02nd June 2023 12:00 AM | Last Updated : 02nd June 2023 12:00 AM | அ+அ அ- |

அரியலூரை அடுத்த லிங்கத்தடிமேடு வள்ளலாா் கல்வி நிலையத்தில் தூய்மைப் பணிகள் வியாழக்கிழமை நடைபெற்றன.
ஜூன் 7 ஆம் தேதி பள்ளிகள் திறப்பை முன்னிட்டு, பள்ளியின் செயலா் புகழேந்தி , தலைமை ஆசிரியா் செளந்தரராஜன், ஊராட்சித் தலைவா் த. சௌந்தரராஜன், பணிதளப் பொறுப்பாளா்கள் கலையரசி, சித்ரகலா ஆகியோா் முன்னிலையில் பணியாளா்கள் தூய்மைப் பணியில் ஈடுபட்டனா். இதில், வகுப்பறைகள், பள்ளி வளாகம், மேல்நிலை நீா் தேக்க தொட்டிகள், கழிவறைகள் ஆகியவற்றை சுத்தம் செய்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...