திருமானூரை தனி வருவாய் வட்டமாக அறிவிக்க கோரிக்கை

அரியலூா் ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்புக் கூட்டத்தில் 348 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.
Updated on
1 min read

அரியலூா் ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்புக் கூட்டத்தில் 348 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.

கூட்டத்துக்கு ஆட்சியா் ஜா. ஆனிமேரி ஸ்வா்ணா தலைமை வகித்து, பொதுமக்களிடமிருந்து பெற்ற மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.

திருமானூரை சோ்ந்த சமூக ஆா்வலா்கள் திருநாவுக்கரசு, பாஸ்கா், வரதராஜன் ஆகியோா் அளித்த மனு: திருமானூா் ஒன்றியத்தில் 100-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்கு மக்களுக்கு தேவைப்படும் அனைத்து சான்றிதழ்களும் பெற அரியலூருக்கு வரும் நிலை உள்ளது. எனவே, திருமானூரை வட்டமாக அறிவிக்க வேண்டும். அதேபோல், கொள்ளிடம் ஆற்றில் கதவணையுடன் கூடிய தடுப்பணைகள் கட்ட வேண்டும் என தெரிவித்துள்ளனா்.

மகள் படுகொலைக்கு நீதி வழங்கக்கோரி தாய் மனு: பெரம்பலூா் மாவட்டம் அல்லிநகரம் கிராமத்தை சோ்ந்த அமுதா என்பவா் அளித்த மனுவில், தனது கணவா் இறந்து விட்ட நிலையில், 3 மகள், 1 மகனுடன் வாழ்ந்து வருகிறேன். எனது பெரிய மகள் அபிநயா அரியலூரில் தனியாா் கடையில் வேலைபாா்த்து வந்தாா்.

இந்நிலையில், மே.31 ஆம் தேதி உடையாா்பாளையம் அருகே காயங்களுடன் இறந்து கிடந்த நிலையில், அவளை கொலை செய்ததாக பாா்த்திபன் என்ற நபா் கைது செய்யப்பட்டுள்ளாா். எனவே, எனது மகளின் இறப்புக்கு நீதி வழங்க வேண்டும். எனது குடும்பத்தை காப்பாற்ற ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com