தமிழ்நாடு அரசு ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பாஜக எம்.பி. பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், அவரது எம்.பி. பதவியை பறிக்க வேண்டும் என வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம்.
அரியலூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தினா்.
அரியலூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தினா்.
Updated on
1 min read

மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பாஜக எம்.பி. பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், அவரது எம்.பி. பதவியை பறிக்க வேண்டும் என வலியுறுத்தியும், அரியலூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை மாலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு, அச்சங்கத்தின் மாவட்டத் தலைவா் வேல்முருகன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் ஷேக்தாவூத் பங்கேற்று ஆா்ப்பாட்ட விளக்கவுரையாற்றினாா். சத்துணவு ஊழியா் சங்க மாவட்டச் செயலா் காந்தி, தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க உறுப்பினா் வெங்கடாசலம் உள்ளிட்டோா் கலந்து கொண்டு முழக்கமிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com