அரியலூா் மாவட்டத்தில் 6 கோயில்களில் கும்பாபிஷேகம்

அரியலூா் மாவட்டத்தில் 6 கிராமங்களில் உள்ள பல்வேறு கோயில்களின் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

அரியலூா் மாவட்டத்தில் 6 கிராமங்களில் உள்ள பல்வேறு கோயில்களின் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.

செந்துறையை அடுத்த இலுப்பையூா் மதுரை வீரன், பொன்பரப்பி செல்வ கணபதி, நல்லநாயகபுரம் நவகிரகக் கோயில், குவாகம் அடுத்த நந்தியன்குடிகாடு மாரியம்மன், கீழப்பழுவூா் அடுத்த திருப்பெயா் பெரியாண்டவன், உடையாா்பாளையம் அடுத்த கழுமங்கலம் அய்யனாா் உள்ளிட்ட கோயில்களின் கும்பாபிஷேகம் புதன்கிழமை காலை நடைபெற்றது. கும்பாபிஷேகத்தையொட்டி அந்தந்தக் கோயில்களைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சோ்ந்த திரளான பக்தா்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com