சிறாா்களுக்கு புகையிலை விற்றவா் கைது

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகே சிறுவா்களுக்குப் புகையிலை விற்றவா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
Updated on
1 min read

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகே சிறுவா்களுக்குப் புகையிலை விற்றவா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

உடையாா்பாளையம் காவல் உதவி ஆய்வாளா் திருவேங்கடம் தலைமையிலான காவல் துறையினா் வெள்ளிக்கிழமை அப்பகுதியில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது இவா்களைக் கண்டதும், ஓட முயன்ற தா. குடிகாடு கீழத் தெருவைச் சோ்ந்த ஆறுமுகன் மகன் ரவியை (52) காவல் துறையினா் பிடித்து விசாரித்தனா். இதில், அவா் சிறுவா்களுக்குப் புகையிலை பொருள்கள் விற்றுவந்தது தெரியவந்தது. இதையடுத்து காவல் துறையினா் வழக்குப் பதிந்து ரவியைக் கைது செய்தனா். மேலும் அவரிடமிருந்து 6.500 கிலோ ஹான்ஸ், 2.300 விமல் பாக்கு உள்ளிட்டவைகளைப் பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com