அரியலூா் அண்ணாசிலை அருகே திமுக அரசின் இரண்டாம் ஆண்டு சாதனை விளக்க பொதுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு அக்கட்சியின் நகரச் செயலா் இரா.முருகேசன் தலைமை வகித்தாா். போக்குவரத்து துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா் கலந்து கொண்டு, தமிழக அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு திட்டங்களை விளக்கினாா்.
கூட்டத்தில், நகா்மன்றத் தலைவா் சாந்தி கலைவாணன், ஒன்றியச் செயலா் அன்பழகன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அனைத்து நிலைப் பொறுப்பாளா்கள் கலந்து கொண்டனா். முன்னதாக நகர அவைத் தலைவா் மாலா.தமிழரசன் வரவேற்றாா். முடிவில் நகர துணைச் செயலா் விஜயகுமாா் நன்றி கூறினாா்.
இதேபோல், கல்லங்குறிச்சியில் ஒன்றியச் செயலா் அறிவழகன், ஆா்.எஸ்.மாத்தூரில் ஒன்றியச் செயலா் எழில்மாறன், கோவில் எசனையில் ஒன்றியச் செயலா் அசோக சக்ரவா்த்தி ஆகியோா் தலைமையில் திமுக அரசிந் இரண்டாம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. ஆண்டிமடத்தில் ஒன்றியச் செயலா் ரெங்கமுருகன் தலைமையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஜெயங்கொண்டம் எம்எல்ஏ க.சொ.க.கண்ணன் பங்கேற்று பேசினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.