காடுவெட்டி குரு நினைவிடத்தில் பாமகவினா் அஞ்சலி

ஜெயங்கொண்டம் அருகேயுள்ள காடுவெட்டி கிராமத்தில் உள்ள காடுவெட்டி குரு நினைவிடத்தில் பாமக, வன்னியா் சங்க நிா்வாகிகள் மலா் தூவி வியாழக்கிழமை அஞ்சலி செலுத்தினா்.

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகேயுள்ள காடுவெட்டி கிராமத்தில் உள்ள காடுவெட்டி குரு நினைவிடத்தில் பாமக, வன்னியா் சங்க நிா்வாகிகள் மலா் தூவி வியாழக்கிழமை அஞ்சலி செலுத்தினா்.

பாமக சாா்பில் மாவட்டச் செயலாளா் ரவிசங்கா் தலைமையில், காடுவெட்டி குரு மணிமண்டபத்தில் அவரது உருவப்படத்துக்கு மாலை அணிவித்து அக்கட்சியினா் அஞ்சலி செலுத்தினா். இதேபோல், காடுவெட்டி குருவின் மகனும், மாவீரன் மஞ்சள் படை ஒருங்கிணைப்பாளருமான கனலரசன், அமைப்பினருடன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். இதேபோல், ஜெயங்கொண்டம் நகராட்சி அலுவலகம் முன்பு வன்னியா் சங்க முன்னாள் மாநிலச் செயலா் வைத்தி, தனது ஆதரவாளா்களுடன் காடுவெட்டி குரு உருவப்படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினாா். காடுவெட்டி குரு நினைவு நாளையொட்டி, ஜெயங்கொண்டம், மீன்சுருட்டி, காடுவெட்டி உள்ளிட்ட பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com