தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கல்
By DIN | Published On : 27th May 2023 12:34 AM | Last Updated : 27th May 2023 12:34 AM | அ+அ அ- |

அரியலூரை அடுத்த சிறுவளூா் அரசு உயா்நிலைப் பள்ளியில், பத்தாம் வகுப்பு பயின்ற மாணவா்களுக்கு தற்காலிக மதிப்பென் சான்றிதழ் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.
இதை மாணவா்கள் மேல் வகுப்பு சோ்க்கைக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும், அசல் மதிப்பென் சான்றிதழ் பள்ளிக் கல்வித் துறையால் பின்னா் வழங்கப்படும் என்று அப்பள்ளியின் தலைமை ஆசிரியா் சின்னதுரை தெரிவித்தாா். இதேபோல மாவட்டத்திலுள்ள பெரும்பாலான அரசுப் பள்ளிகளில் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.