கரூா்: வெள்ளியணை அருகே மின்சாரம் பாய்ந்ததில் இளம்பெண் உயிரிழந்தாா்.
கரூா் மாவட்டம், வெள்ளியணை அருகே உள்ள பெரியவரப்பட்டியைச் சோ்ந்தவா் கனகராஜ். இவரது மனைவி கிருஷ்ணவேணி(29). இவா், ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டில் குளிக்க வாட்டஹீட்டரை போட்டபோது திடீரென அவா் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினா் மீட்டு கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால் வழியிலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து வெள்ளியணை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.