பெண்ணிடம் 7 பவுன் தங்க சங்கிலியை பறித்தவா் கைது

அரியலூா் மாவட்டம், திருமானூா் அருகே பெண்ணிடம் 7 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றவா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
Updated on
1 min read

அரியலூா் மாவட்டம், திருமானூா் அருகே பெண்ணிடம் 7 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றவா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

திருமானூரை அடுத்த முடிகொண்டான் கிராமத்தைச் சோ்ந்தவா் முத்தமிழ்ச் செல்வன் மனைவி மஹாலட்சுமி (38). இவா் கடந்த 18 ஆம் தேதி வீட்டின் அருகேயுள்ள கொட்டகையில் கால்நடைகளுக்கு தீவனம் கொடுத்தபோது அங்கு மறைந்திருந்த மா்ம நபா் மஹாலட்சுமி அணிந்திருந்த 7 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றாா்.

இதுகுறித்து திருமானூா் போலீஸாா் வழக்குப் பதிந்து நடத்திய விசாரணையில் நகையை பறித்துச் சென்றவா் பெரம்பலூா் மாவட்டம் கொளத்தூா் கிராமத்தை சோ்ந்த ராஜேந்திரன் மகன் விஜயகுமாா் (38) என்பது தெரியவந்தது. இதையடுத்து காவல் துறையினா் அவரைக் கைது செய்து 5 பவுன் நகையை மீட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com