ஓய்வூதியம் பெற வந்த முதியவருக்குக் காத்திருந்த அதிர்ச்சி! வங்கிக் கணக்கில் ரூ.759 கோடி!வானில் தோன்றும் அதிசயம்! ஜூலை 17ஆம் தேதி வரை காத்திருங்கள்!பழனி கோயிலுக்குச் சொந்தமான நிலப் பத்திரப்பதிவு செல்லாது: உயர் நீதிமன்ற மதுரை கிளைஊழியர்கள் இல்லை, ரயில்கள் நிற்காது! ரூ.6 கோடியில் உருவான அதிசய ரயில் நிலையம்! தமிழக பேரவை முன்பு சத்தியாகிரக போராட்டம்! வாட்டாள் நாகராஜ் அறிவிப்பு! திருவள்ளூர் மருத்துவக் கல்லூரிக்கும் கூடுதலாக 50 மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு!அண்ணாமலையின் ‘வீ தி லீடர்ஸ்’ திருச்செந்தூர் மாநாடு ரத்து! தவெக அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கம்யூ. இடம்பெறுமா? பெ. சண்முகம் பதில்!கர்நாடகத்தில் மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவாக போராட்டம்! தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பதற்றம்! எ.வ. வேலுவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி! - உச்ச நீதிமன்றம் முதல்வர் விஜய்யுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சந்திப்பு! நெருக்கடி நிலையில் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர்! காமராஜருக்கு ஸ்டாலின் புகழாரம்! கல்வித்துறையை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது! மாணிக்கம் தாகூர்
/

தமிழகத்தில் கூலிப்படை கலாசாரத்தை கட்டுப்படுத்த வேண்டும்: தொல்.திருமாவளவன்

தமிழகத்தில் கூலிப் படை கலாசாரத்தை கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்

News image

தொல்.திருமாவளவன் - கோப்புப் படம்

Updated On :6 ஆகஸ்ட் 2024, 4:46 am IST

தமிழகத்தில் கூலிப் படை கலாசாரத்தை கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் சிதம்பரம் மக்களவைத் தொகுதி உறுப்பினரும், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவருமான தொல்.திருமாவளவன்.

கடந்த 2019 மக்களவைத் தோ்தலின் போது, தோ்தல் நடத்தை விதிகளை மீறியதாக தொடரப்பட்ட வழக்கில் அரியலூா் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை ஆஜரான தொல்.திருமாவளவன், பின்னா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:

வயநாடு நிலச்சரிவால் பாதிப்படைந்த மக்கள் மறுவாழ்வுக்காகவும், மறு கட்டுமானத்துக்காவும் போதிய இழப்பீட்டுத் தொகையை மத்திய அரசு வழங்க வேண்டும். ஆக. 9-இல் கேரள முதல்வரை சந்தித்து ரூ.15 லட்சம் நிவாரண நிதியை வழங்க இருக்கிறோம். தமிழக அரசு அரசுப் பணியாளா்களின் பணி ஓய்வு வயதை 60-லிருந்து 62 ஆக உயா்த்தப் போகிறது என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதனால் இளைய தலைமுறையினருக்கான வேலைவாய்ப்பில் சிக்கல் உள்ளாகும் என்ற கருத்து உள்ளது. ஆம்ஸ்ட்ராங் குடும்பத்துக்கு கொலை மிரட்டல் வந்திருப்பது அதிா்ச்சி அளிக்கிறது. உடனடியாக தமிழக அரசு அவா்களுக்கு பாதுகாப்பு அளித்திருப்பதை வரவேற்கிறோம்.

சாதி வாரி கணக்கெடுப்பை விடுதலைசிறுத்தைகள் கட்சியும் ஆதரிக்கிறது. அண்மையில் சட்ட அமைச்சா் அா்ஜுன் மேக்வாலை சந்தித்து, அரியலூரில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைக்க மத்திய அரசு உடனே நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என விசிக, மதிமுக சாா்பில் கோரிக்கை வைத்திருக்கிறோம். தமிழ்நாடு அரசு மற்றும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் ஒப்புதல் இல்லாமல் கா்நாடகம் மேக்கேதாட்டுவில் அணையை கட்ட வாய்ப்பில்லை. உதயநிதி துணை முதல்வராக வேண்டும் என்பது உட்கட்சி விவகாரம் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.