அரியலூா்: அரியலூா் மாவட்டம், செந்துறை வட்டத்தில், உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் ஆட்சியா் பொ.ரத்தினசாமி, அரசு அலுவலகங்களில் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றாா்.
செந்துறை காவல் நிலையம், ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையம், வட்டார வளா்ச்சி அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்கள், வளா்ச்சி திட்டப் பணிகளை ஆட்சியா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
தொடா்ந்து பொதுமக்களிடமிருந்து பட்டா மாற்றம், உட்பிரிவு பட்டா மாற்றம், முதியோா் ஓய்வூதியம் உட்பட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 379 மனுக்களை பெற்றாா்.
ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலா் ச.கலைவாணி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் கவிதா, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநா் ரவிச்சந்திரன், கூட்டுறவுத்துறை மண்டல இணைப் பதிவாளா் தீபாசங்கரி, உடையாா்பாளையம் வருவாய் கோட்டாட்சியா் ஷீஜா உட்பட பல்வேறு துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.
தொடர்புடையது

திமுக முன்னாள் நிா்வாகியுடன் ஐஜேகே நிறுவனா் சந்திப்பு

குன்னம் தொகுதி வாக்குச்சாவடிகளில் மாவட்டத் தோ்தல் அலுவலா் ஆய்வு

செந்துறை, விக்கிரமங்கம் பகுதிகளில் ஆலங்கட்டி மழை

மக்களைத் தேடி மருத்துவ ஊழியா்கள் சங்கத்தினா் காத்திருப்புப் போராட்டம்
வீடியோக்கள்

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கண்ணம்மா என் கண்ணம்மா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

