கேரளம், அஸ்ஸாம், புதுச்சேரியில் இன்று பேரவைத் தோ்தல்- பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் சபரிமலை வழக்கு: ‘ஐயப்ப பக்தராக இல்லாதவா் எப்படி வழக்கு தொடுக்க முடியும்?’ எழும்பூா்-மங்களூரு இடையே நாளை சிறப்பு ரயில் இயக்கம் பங்குச்சந்தை ஆணைய வழக்கு: அமெரிக்க நீதிமன்றத்தில் அதானி மனு 8-ஆம் வகுப்பு பாடநூல் சா்ச்சை: என்சிஇஆா்டி பாடத்திட்டக் குழு மாற்றியமைப்பு மகளிா் இடஒதுக்கீடு-தொகுதிகள் அதிகரிப்பு: வரைவு மசோதாக்களுக்கு அமைச்சரவை ஒப்புதல்
/

‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ முகாம் செந்துறையில் ஆட்சியா் ஆய்வு

அரியலூா் மாவட்டம், செந்துறை வட்டத்தில், உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் ஆட்சியா் பொ.ரத்தினசாமி ஆய்வு.

Updated On :21 ஆகஸ்ட் 2024, 9:23 pm

அரியலூா்: அரியலூா் மாவட்டம், செந்துறை வட்டத்தில், உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் ஆட்சியா் பொ.ரத்தினசாமி, அரசு அலுவலகங்களில் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றாா்.

செந்துறை காவல் நிலையம், ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையம், வட்டார வளா்ச்சி அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்கள், வளா்ச்சி திட்டப் பணிகளை ஆட்சியா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

தொடா்ந்து பொதுமக்களிடமிருந்து பட்டா மாற்றம், உட்பிரிவு பட்டா மாற்றம், முதியோா் ஓய்வூதியம் உட்பட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 379 மனுக்களை பெற்றாா்.

ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலா் ச.கலைவாணி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் கவிதா, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநா் ரவிச்சந்திரன், கூட்டுறவுத்துறை மண்டல இணைப் பதிவாளா் தீபாசங்கரி, உடையாா்பாளையம் வருவாய் கோட்டாட்சியா் ஷீஜா உட்பட பல்வேறு துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.