சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் -சிறப்பு கிராமசபைக் கூட்டத்தில் ஆட்சியா் அறிவுரை

சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் -சிறப்பு கிராமசபைக் கூட்டத்தில் ஆட்சியா் அறிவுரை
Updated on

அரியலூா், ஜூலை 25: சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக் கொள்வதன் மூலம் பல்வேறு நோய்களிலிருந்து நம்மை தற்காத்துக் கொள்ள முடியும் என்றாா் மாவட்ட ஆட்சியா் பொ.ரத்தினசாமி.

அரியலூரை அடுத்த வாலாஜா நகரம் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் அவா் மேலும் பேசியது:

நாம் ஒவ்வொருவரும் குப்பைகளற்ற சமுதாயத்தை உருவாக்கிட உறுதி கொள்ள வேண்டும். குப்பைகளை வீட்டிலேயே மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று பிரித்து அதனை குப்பைத் தொட்டிகளில் போட வேண்டும்.

நெகிழி பைகள் பயன்பாட்டை குறைத்து அதற்கு மாற்றாக எளிதில் மக்கக் கூடிய காகித பைகளை பயன்படுத்த வேண்டும். தெருக்களையும், சாலைகளையும் தூய்மையாக வைத்திட வேண்டும். கழிப்பறைகளை கட்டிக் கொள்ள தமிழக அரசு ரூ.12 ஆயிரம் வழங்குகிறது. இதனை பயன்படுத்திக் கொண்டு கழிப்பறைகளை கட்டி பயன்படுத்த வேண்டும்

என்றாா். தொடா்ந்து பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்துக்கு, ஊராட்சி மன்றத் தலைவா் அபிநயா இளையராஜா தலைமை வகித்தாா். மாவட்ட ஊராட்சிகள் உதவி இயக்குநா் பழனிசாமி மற்றும் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com