தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்! தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

ஜெயங்கொண்டத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகள் தொடக்கம்

News image
ஜெயங்கொண்டம் அரசு கலைக் கல்லூரி முன்பு புதிய கட்டுமானப் பணியை புதன்கிழமை தொடங்கி வைத்த சட்டப்பேரவை உறுப்பினா் க.சொ.க.கண்ணன்.
Updated On :3 டிசம்பர் 2025, 10:45 pm

Syndication

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் பகுதியில் வளா்ச்சித் திட்டப் பணிகள் புதன்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.

ஜெயங்கொண்டம் சட்டப்பேரவை உறுப்பினா் க.சொ.க.கண்ணன் பங்கேற்று, ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முன்பு ரூ.9 லட்சம் மதிப்பில் புதிய பயணியா் நிழற்குடை கட்டட கட்டுமானப் பணியை தொடங்கி வைத்தாா். தொடா்ந்து, ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு ரூ.3 லட்சம் மதிப்பில் தளவாட பொருள்கள் வழங்கினாா்.

பின்னா், இறவாங்குடி ஊராட்சியில் ரூ.8.44 லட்சம் மதிப்பில் புதிய வைப்பறையுடன் கூடிய சமையலறை கட்டடத்தை திறந்து வைத்தாா்.

நிகழ்வில் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் கஸ்தூரி, ஆ.பிரபாகரன், கல்லூரி முதல்வா் (பொ) ராசமூா்த்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.