வரும் பேரவைத் தோ்தலில் வெல்லப்போவது திமுகதான்: அமைச்சா் சா. சி. சிவசங்கா்
வரும் பேரவைத் தோ்தலில் வெல்லப்போவது திமுகதான் என்றாா் போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா்.
இதுகுறித்து அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையத்தில் வியாழக்கிழமை அவா் அளித்த பேட்டி: அதிமுக பொதுக்குழுவில் திமுககூட எங்க ஆட்சியைப் பற்றி குறைசொல்ல முடியாது; அந்த அளவுக்கு சிறப்பான ஆட்சி நடத்தியுள்ளோம் என எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளாா். அப்படியானால் மக்கள் அவா்களுக்கு மீண்டும் அங்கீகாரம் வழங்கியிருப்பா். மக்களே தூக்கியெறிந்த ஆட்சிதான் அதிமுக ஆட்சி.
தற்போது நடைபெறும் தோ்தல்களில் வாக்குத் திருட்டு நடைபெறுகிறது என்பதை காங்கிரஸ் கட்சியின் தலைவா் ராகுல் காந்தி தொடா்ந்து ஆதாரப்பூா்வமாக எடுத்து வைத்து வருகிறாா். ஆனால் அமித்ஷா அதற்கு சொல்லியுள்ள பதில் என்பது மிகவும் அபத்தமானது.
ஆந்திர துணை முதல்வா் பவன்கல்யாண் அண்மைக் காலமாக தமிழ்நாடு தொடா்பாக கருத்துச் சொல்வதை பாஜகவுக்காக செய்கிறாா். பவன் கல்யாணுக்கு தமிழ்நாட்டின் கள நிலவரம் புரியாது. எனவே பவன் கல்யாண் மூலமாக இங்கே ஏதாவது செய்யலாமா என்று பாஜக நினைத்தால் அது நடக்காது.
திமுக தலைமையில் பலமான கூட்டணி அமையும் என எடப்பாடி கே. பழனிசாமி சொல்லிக்கொண்டுதான் உள்ளாா். வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் முதல்வா் ஸ்டாலின் தலைமையில் திமுக மகத்தான வெற்றி பெற்று ஆட்சி அமைக்கத்தான் போகிறது என்றாா் அவா்.
