அரியலூர்
அரியலூரில் தேமுதிக ஆலோசனைக் கூட்டம்
அரியலூா் தேமுதிக அலுவலகத்தில் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
அக்கட்சியின் மாவட்டச் செயலா் இராம. ஜெயவேல் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், டிச.28 ஆம் தேதி தேமுதிக தலைவா் விஜயகாந்த் 2 ஆம் ஆண்டு நினைவு நாள், கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே நடைபெறும் மக்கள் உரிமை மீட்பு மாநாட்டில் திரளாகக் கலந்து கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில் அனைத்து ஒன்றிய, பேரூா் மற்றும் கிளை கழக நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
