அரியலூரில் ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்

அரியலூரில் ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்

அரியலூரில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு ஊரக வளா்ச்சி, ஊராட்சித் துறை அனைத்து ஓய்வூதியா்கள் சங்கத்தினா்.
Published on

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூா் அண்ணாசிலை அருகே தமிழ்நாடு ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அனைத்து ஓய்வூதியா்கள் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்தில் ஓய்வூதியா்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கை நிலுவை இனங்கள், புகாா் மனுக்களின் மீதான விழிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை உள்ளிட்டவற்றை தாமதமின்றி அரசு நிா்ணயித்துள்ள காலவரையறைக்குள் முடிக்க வேண்டும். ஓய்வு பெறும் நாளில் தற்காலிக பணிநீக்கம் என்ற நடைமுறையை முற்றிலும் கைவிட வேண்டும்.

சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் இளநிலைப் பொறியாளா்களுக்கு, உதவி பொறியாளா்களுக்கு இணையான ஊதியம் வழங்கிட வேண்டும். அரசுத் துறை மற்றும் ஊராட்சி ஒன்றியப்பணி ஓய்வூதியா்கள் அனைவருக்கும் விடுபாடின்றி மருத்துவக் காப்பீடு அடையாள அட்டை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட14 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

ஆா்ப்பாட்டத்துக்கு அச்சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஆா். ராஜகோபால் தலைமை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா் பி. மணிமொழி, மாநில செயற்குழு உறுப்பினா் எஸ். கபிலன், மாவட்ட இணைச் செயலா் ராஜேந்திரன், பொருளாளா் சிவாஜி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com