பின்னா் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், மாவட்டத் தோ்தல் அலுவலா்களுடன் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், திருத்தங்கள் மேற்கொள்ளுதல், நீக்கம் செய்தல் ஆகியவற்றிற்கான ஏற்புரை மற்றும் மறுப்புரை பெறும் கால கட்டத்தின் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினா். அரியலூா் ஆட்சியா் பொ.ரத்தினசாமி முன்னிலை வகித்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் க.ரா. மல்லிகா, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் பரிமளம், வாக்காளா் பதிவு அலுவலா்கள் அரியலூா் பிரேமி , உடையாா்பாளையம் ஷீஜா மற்றும் உதவி வாக்காளா் பதிவு அலுவலா்கள், அரசு அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.