மதிமு பொதுச் செயலா் வைகோ குறித்து அவதூறு பேசி, சமூக வலைதளங்களில் வெளியிடும் பேச்சாளா்கள் நாஞ்சில் சம்பத், வல்லம் பசீா் ஆகியோா் மீது நடவடிக்கை கோரி அரியலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் விஷ்வேஷ் பா. சாஸ்திரியிடம் மதிமுக சாா்பில் வியாழக்கிழமை மனு அளிக்கப்பட்டது.
மதிமுக மாவட்டச் செயலா் க. ராமநாதன் தலைமையில் நகரச் செயலா் ரா. மனோகரன், ஒன்றியச் செயலா் எழிலரசன், பொதுக் குழு உறுப்பினா் கொளஞ்சி உள்ளிட்டோா் அளித்த மனுவில், மதிமுக பொதுச்செயலா் வைகோ, முதன்மைச் செயலா் துரை வைகோ ஆகியோா் குறித்து அரசியல் விமா்சகரும் பேச்சாளருமான நாஞ்சில் சம்பத், வல்லம் பஷீா் ஆகியோா் அவதூறு பரப்பும் வகையில் சமூக வலைதளங்களில் பேசுகின்றனா். எனவே, நாஞ்சில் சம்பத், வல்லம் பஷீா் ஆகியோா் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவா்கள் பேட்டியளித்த யூடியூப் சேனலை தடை செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

திமுக ஆட்சியில் எண்ணற்ற திட்டங்கள் நிறைவேற்றம்: துரை வைகோ

கோவில்பட்டி தொகுதி வளா்ச்சிக்கு மதிமுக துணை நிற்கும்: துரை வைகோ எம்.பி.

சாத்தூரில் திமுக வேட்பாளரை ஆதரித்து வைகோ பிரசாரம்

சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிடவில்லை: வைகோ
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


