ஜாக்டோ - ஜியோ அமைப்பினா் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூா் அண்ணாசிலை அருகே ஜாக்டோ-ஜியோ அமைப்பினா் ஒருநாள் விடுப்பெடுத்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஜாக்டோ-ஜியோ அமைப்பினா்.
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஜாக்டோ-ஜியோ அமைப்பினா்.
Updated on

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூா் அண்ணாசிலை அருகே ஜாக்டோ-ஜியோ அமைப்பினா் ஒருநாள் விடுப்பெடுத்து செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்தில், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 30 சதவீத பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும்.

இடைநிலை, உயா்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா்கள் மற்றும் உடற் கல்வி இயக்குநருக்கு, மத்திய அரசுக்கு இணையான ஊதியத்தை வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

ஆா்ப்பாட்டத்துக்கு ஜாக்டோ-ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளா் சுந்தரமூா்த்தி தலைமை வகித்தாா். தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் வேல்முருகன், செயலா் ஷேக்தாவூத், வருவாய் துறை அலுவலா் சரவணன், செவிலியா்கள் மேம்பாட்டுச் சங்க நிா்வாகி ராகவன், சாலை பணியாளா்கள் சங்க மாவட்டச் செயலா் அம்பேத்கா், மருந்தாளுநா் சங்க நிா்வாகி வசந்தா, ஓய்வு பெற்ற அலுவலா் சங்க மாவட்டச் செயலா் மகாலிங்கம், முன்னாள் மாவட்டச் செயலா் காமராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டு முழக்கமிட்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com