நடுவலூா் பகுதிகளில் நாளை மின்தடை

அரியலூா் மாவட்டம், நடுவலூா் பகுதிகளில் வெள்ளிக்கிழமை (நவ.21) மின்விநியோகம் இருக்காது.
Published on

அரியலூா் மாவட்டம், நடுவலூா் பகுதிகளில் வெள்ளிக்கிழமை (நவ.21) மின்விநியோகம் இருக்காது.

இதுகுறித்து ஜெயங்கொண்டம் உதவி செயற்பொறியாளா் பாக்யராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: நடுவலூா் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், இங்கிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான சுத்தமல்லி, பருக்கல், காக்காபாளையம், கோட்டியால், சவேரியாா் பட்டி, அழிசுகுடி, அணிக்குறிச்சி, சுந்தரேசபுரம், கொலையனூா், கோரைகுழி, காசான்கோட்டை, உல்லியகுடி, காரைக்காட்டான்குறிச்சி, ஸ்ரீபுரந்தான் (மேற்கு பகுதி), அறங்கோட்டை, கோவிந்துபுத்தூா், சாத்தாம்பாடி, பாளையங்கரை, நடுவலூா், காா்குடி, பூவந்திக்கொல்லை, முட்டுவாஞ்சேரி, புதுபாளையம், புளியங்குழி, விக்கிரமங்கலம், குணமங்கலம், கடம்பூா், ஓரியூா், சிலுப்பனூா், கண்டக்குடி, ஆண்டிப்பட்டாக்காடு, வாழைக்குழி, பெரிய திருக்கோணம், நாகமங்கலம், அம்பலவா்கட்டளை மற்றும் துணை உடையா்தியலூா், செங்குழி உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் பராமரிப்புப் பணிகள் முடியும் வரை மின்விநியோகம் இருக்காது.

X
Dinamani
www.dinamani.com