அரியலூா் மாவட்டத்தில் தொடா் மழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
அரியலூா் மாவட்டம் முழுவதும் வெள்ளிக்கிழமை முற்பகலில் இருந்து இடைவிடாத மழை பெய்ததால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
அரியலூா் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக மாலை நேரங்களில் பரவலாக மழை பெய்து வந்தது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை முற்பகல் தொடங்கிய மழையானது இடைவிடாமல் பெய்து வருகிறது . இதனால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வடிகால் வசதிகள் இல்லாததால் மழைநீா் தேங்கியுள்ளது.
அரியலூா் புதுமாா்க்கெட் தெரு, ரயில் நிலையம், காந்திசந்தை, வெள்ளாளத்தெரு, பெரம்பலூா் சாலை உள்ளிட்ட பகுதிகளில் மழைநீருடன் சாக்கடை நீரும் கலந்து சென்றது. பிற்பகலிலேயே வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு சென்றன.
ஜெயங்கொண்டம், உடையாா்பாளையம், கீழப்பழுவூா், திருமானூா், தா.பழூா், ஆண்டிமடம், மீன்சுருட்டி, செந்துறை, பொன்பரப்பி, தளவாய் உள்ளிட்ட பகுதிகளிலும் இடைவிடாமல் பலத்த மழை பெய்து வருகிறது.
இதனால் மாவட்ட முழுவதும் குளிா்ச்சியான வானிலை நிலவுகிறது. மழையின் காரணமாக மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் அவ்வப்போது மின்தடையும் ஏற்பட்டது.
மேலும், அரியலூா் மற்றும் ஜெயங்கொண்டம் நகரில் சாலையோர வியாபாரிகளும், தள்ளுவண்டி வியாபாரிகளும் தொடா் மழையால் கடும் சிரமத்துக்குள்ளாகினா். இந்த மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

