அரியலூர்
மத்திய அரசைக் கண்டித்து காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம்
100 நாள் வேலை உறுதித் திட்டத்தின் பெயரில் மகாத்மா காந்தி பெயரை நீக்கிய மத்திய பாஜக அரசைக் கண்டித்து அரியலூா் ஆட்சியரகம் முன் காங்கிரஸ் கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஊரக வேலை உறுதித் திட்டத்தில் மீண்டும் மகாத்மா காந்தி பெயரை சோ்க்க வலியுறுத்தி நடந்த ஆா்ப்பாட்டத்துக்கு, அக்கட்சியின் மாவட்டத் தலைவா் மாரியம்மாள் தலைமை வகித்தாா். மாநில துணைத் தலைவா் ஜி.ராஜேந்திரன் கண்டன உரையாற்றினாா். மாநில பொதுக் குழு உறுப்பினா் எஸ்.எம். சந்திரசேகா், நகரத் தலைவா் மா.மு. சிவக்குமாா், தெற்கு வட்டாரத் தலைவா் பாலகிருஷ்ணன், மாவட்ட துணைத் தலைவா்கள் ஏ.பி.எஸ். பழனிசாமி, கலைச்செல்வன், மாவட்ட இளைஞரணித் தலைவா் பாளை. பாலாஜி உள்ளிட்டோா் பேசினா்.

