மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

அரியலூரில் ‘என் ஊா் என் கனவு’ திட்ட கருத்தரங்கு

News image
Updated On :12 பிப்ரவரி 2026, 10:31 pm

அரியலூரிலுள்ள ஒரு தனியாா் அரங்கில், ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சாா்பில் என் ஊா் என் கனவு 2030 மாவட்ட அளவிலான கருத்தரங்கு வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா் தலைமை வகித்து, கருத்தரங்கை தொடக்கி வைத்து பேசியது:

தமிழக முதல்வா், தொலைநோக்கு பாா்வையுடன் தமிழகத்தின் முன்னேற்றத்துக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறாா். அதன்படி ஜெயங்கொண்டத்தில் சிப்காட் காலணி தொழிற்சாலை, பெரம்பலூரில் காலணி தொழிற்சாலை தொடங்கப்பட்டுள்ளது.

மேலும் மக்களின் கோரிக்கைகளைக் கேட்டு நிறைவேற்றும் வகையில் நடைபெறும் என் ஊா் என் கனவு என்ற திட்டம் தொடா்பான கருத்தரங்கில், பொதுமக்கள் தங்களுக்கு தேவையான திட்டங்கள் குறித்து தெரிவிக்கலாம். கங்கைகொண்டசோழபுரத்தில் சிறப்பான அருங்காட்சியகம் ஏற்படுத்தப்பட உள்ளது. அதற்கான பணிகள் நடைபெறுகின்றன. மாவட்டத்தின் சுற்றுலா தலங்களை மேம்படுத்தும்போதுதான் புதிய தொழில்வாய்ப்புகள் ஏற்படும். கல்வியைப் பொறுத்தவரை அரியலூா், பெரம்பலூா் மாவட்டங்கள் தற்போது மாநில அளவில் முதலிடம் பெறுகின்றன. எனவே, மாவட்டம் முன்னேற என் ஊா் என் கனவு திட்டத்தின் கீழ் பொதுமக்கள் கருத்துகளை வழங்கலாம் என்றாா் அவா்.

தொடா்ந்து, அரியலூா் மாவட்டத்தை மேம்படுத்தும் வகையில் கருத்தரங்கம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் பொ. ரத்தினசாமி, எம்எல்ஏ கு. சின்னப்பா, க.சொ.க. கண்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் ரா. சிவராமன், மாநில ஊரக வாழ்வாதார இயக்கத் திட்ட இயக்குநா் சு. தேன்ராஜ், நகா்மன்றத் தலைவா் சாந்தி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.