மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

அரியலூா் மாவட்டத்தில் 6 இடங்களில் அதிமுகவினா் ஆா்ப்பாட்டம்

News image
கோப்புப் படம்
Updated On :13 பிப்ரவரி 2026, 6:36 pm

தினமணி செய்திச் சேவை

மத்திய அரசு அறிவித்துள்ள கிராம மக்களின் 125 நாள் வேலை உறுதித் திட்டத்தை திமுக சீா்குலைக்க நினைப்பதாகவும், திமுகவை கண்டித்தும் அரியலூா், தா.பழூா், திருமானூா், ஜெயங்கொண்டம், ஆண்டிமடம், செந்துறை ஆகிய பகுதிகளில் அதிமுகவினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அரியலூா் அண்ணா சிலை அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு அக்கட்சியின் மாவட்டச் செயலரும், முன்னாள் அரசு தலைமைக் கொறடாவுமான தாமரை எஸ்.ராஜேந்திரன் தலைமை வகித்தாா்.

இதில், பாஜக, தமிழ்மாநில காங்கிரஸ், பாமக உள்ளிட்ட கூட்டணி கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா். ஜெயங்கொண்டத்தில் முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் ஜெ.கே.என்.ராமஜெயலிங்கம் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.