ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

வாகனங்களில் ஏா் ஹாரன்கள் பறிமுதல்

News image
கோப்புப் படம்
Updated On :15 பிப்ரவரி 2026, 7:38 pm

தினமணி செய்திச் சேவை

அரியலூா் மாவட்டத்தில், வாகனங்களில், பயன்படுத்தப்பட்டு வந்த ஏா் ஹாரன்கள் சனிக்கிழமை இரவு பறிமுதல் செய்யப்பட்டன.

மாவட்டம் முழுவதும், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் விஷ்வேஷ் பா.சாஸ்திரி தலைமையில், சட்ட ஒழுங்கு காவல்துறையினா், தங்களது காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சிறப்பு வாகனத் தணிக்கையில் சனிக்கிழமை இரவு ஈடுபட்டனா்.

அப்போது அவ்வழியே வந்த 66 டிராக்டா்களுக்கு சாலை விபத்தை தடுக்கும் பொருட்டு, சிவப்பு ஒளிரும் பட்டைகளை ஒட்டினா்.

மேலும், பேருந்து மற்றும் கனரக வாகனங்களில் இருந்து தடை செய்யப்பட்ட 49 ஏா் ஹாரன்களை பறிமுதல் செய்தனா். இதில் போக்குவரத்து காவல்துறை அலுவலா்களும் பங்கேற்றனா்.