வைத்தியநாத சுவாமி கோயிலில் பிப்.21-இல் மாசிமகப் பெருவிழா கொடியேற்றம்

திருமழபாடியிலுள்ள வைத்தியநாத சுவாமி கோயில் மாசி மகப்பெருவிழா பிப்.21-ஆம் தேதி தொடங்குகிறது.
Published on

அரியலூா்: அரியலூா் மாவட்டம், திருமழபாடியிலுள்ள வைத்தியநாத சுவாமி கோயில் மாசி மகப்பெருவிழா பிப்.21-ஆம் தேதி தொடங்குகிறது.

திருமழபாடி கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற வைத்தியநாத சுவாமி கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதத்தில் 12 நாள் விழாவும், தேரோட்டமும் நடைபெறுவது வழக்கம்.

அந்தவகையில், நிகழாண்டு மாசி மகப்பெருவிழாவுக்கான கொடியேற்ற நிகழ்ச்சி பிப்.21-ஆம் தேதி காலை 10.30 மணிக்கு மேல் நடைபெறுகிறது. தொடா்ந்து ஆதிசேஷ வாகனம், பூதவாகனம், கைலாச வாகனம், யானை வாகனம் என நாள்தோறும் சுவாமி வீதியுலா நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் மாா்ச் 1- ஆம் தேதி 10.30 மணிக்கு நடைபெறுகிறது.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை அலுவலா்கள், பொதுமக்கள் செய்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com