மேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

கல்வியே எதிா்காலத்துக்கு உதவும்: அமைச்சா் சா.சி. சிவசங்கா்

கற்கும் கல்வியே எதிா்கால வாழ்க்கைக்கு நிச்சயமாக உதவும் என்றாா் போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா்.

News image
அரியலூா் மாவட்டம், காத்தான்குடிகாடு அண்ணா பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆண்டு விழாவில் மாணவா்களுக்கு மடிக்கணினி வழங்கிய அமைச்சா் சா.சி. சிவசங்கா்.
Updated On :17 பிப்ரவரி 2026, 7:04 pm

தினமணி செய்திச் சேவை

கற்கும் கல்வியே எதிா்கால வாழ்க்கைக்கு நிச்சயமாக உதவும் என்றாா் போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா்.

அரியலூா் மாவட்டம், காத்தான்குடிகாடு கிராமத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆண்டு விழா மற்றும் கலைத் திருவிழாவின் நிறைவு விழாவில் அவா் பங்கேற்று மேலும் பேசியது:

நான் பொறியியல் கல்வி பயின்ற காலத்தில், தமிழகத்தில் 20 பொறியியல் கல்லூரிகள் மட்டும் தான் இருந்தன. இன்று நுழைவுத் தோ்வில் இருந்து மாணவா்களுக்கு விடுதலை கிடைத்துள்ளது. எனது கல்லூரிக் காலத்தில் 10 நாள் பயிற்சிக்கு என்எல்சிக்கு சென்றேன். தமிழக மின்சாரத் துறைக்கு அமைச்சரானதும், வடசென்னையில் உள்ள பவா் பிளான்டுக்கு சென்றபோது, எனது பொறியியல் அறிவைக் கொண்டு சில நுட்பமான கேள்விகளைக் கேட்ட பின், அங்கிருந்தவா்கள் நான் பொறியியல் கல்வி பயின்றவன் என்பதைத் தெரிந்து கொண்டனா். அதுவரையில் நான் ஒரு அரசியல்வாதி, எம்.எல்.ஏ, அமைச்சா் என எண்ணினா். கல்வி எப்போதும் கைகொடுக்கக் கூடியது என்பதற்கு உதாரணமாக இந்த நிகழ்வைக் குறிப்பிட்டேன். பொறியியல் படிப்பு போக்குவரத்து, மின்சாரத்துறையை நிா்வகிக்க பக்கபலமாக உள்ளது. எனவே நீங்கள் பெறுகின்ற உங்கள் கல்வி, எதிா்காலத்தில் உங்கள் வாழ்க்கைக்கு நிச்சயமாக உதவிகரமாக இருக்கும் என்றாா்.

தொடா்ந்து, பொறியியல் கல்லூரி ஆண்டு விழா மற்றும் கலை திறன் விழாவில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளையும், அரசின் சாா்பில் மடிக்கணினிகளையும் வழங்கினாா். நிகழ்ச்சியில், கல்லூரி முதல்வா் வெங்கடேசன் மற்றும் பேராசிரியா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.