அரியலூா் மாவட்டம், பொய்யாதநல்லூரில் ரூ.25 கோடியில் புதிய துணை மின் நிலையம் மற்றும் 16 அரசுப் பள்ளிகளில் ரூ. 24.08 கோடியில் புதிதாகக் கட்டப்பட்ட கட்டடங்களை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி வாயிலாக வியாழக்கிழமை திறந்துவைத்தாா்.
அதன் காணொலிக் காட்சி நேரலை கரு.பொய்யூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாவட்ட வருவாய் அலுவலா் க.ரா. மல்லிகா அப்பள்ளியின் புதிய வகுப்பறை கட்டடத்தில் குத்துவிளக்கு ஏற்றினாா்.
நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ரேணுகோபால், பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் வெங்கடேசன், பள்ளித் தலைமை ஆசிரியா் மணிமேகலை மற்றும் ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

பள்ளிக் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை போக்சோவில் ஆசிரியா் கைது

சிலால், குமிளங்குழியில் துணை மின் நிலையம் கட்டும் பணிக்கு அமைச்சா் அடிக்கல்

ஆலங்குளத்தில் துணை சுகாதார நிலையம் திறப்பு

படுக்கப்பத்தில் துணை மின் நிலையம் திறப்பு
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


