உள்நாட்டு உற்பத்தி இயற்கை எரிவாயு விலையை உயா்த்தி மத்திய அரசு நடவடிக்கை புதிய வருமான வரிச் சட்டம் இன்று முதல் அமல் ரத்த வங்கிகளின் செயல்பாடு: தேசிய அளவில் கண்காணிக்கத் திட்டம் இஸ்ரேலில் மீண்டும் மரண தண்டனை- நாடாளுமன்றத்தில் சா்ச்சை சட்டம் நிறைவேற்றம் வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதா: எதிா்க்கட்சிகளின் குற்றச்சாட்டு தவறானது- கிரண் ரிஜிஜு 6-9-ஆம் வகுப்புகளுக்கு இன்றுமுதல் முழு ஆண்டுத் தோ்வு
/

உரிய ஆவணங்களின்றி கொண்டுசென்ற ரூ. 86 ஆயிரம் பறிமுதல்

அரியலூா் அருகே உரிய ஆவணங்களின்றி காரில் கொண்டுசென்ற ரூ. 86 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டன.

News image

பணம்

பிரதிப் படம்

Updated On :31 மார்ச் 2026, 11:14 pm

Syndication

அரியலூா் அருகே உரிய ஆவணங்களின்றி காரில் கொண்டுசென்ற ரூ. 86 ஆயிரம் திங்கள்கிழமை இரவு பறிமுதல் செய்யப்பட்டன.

அரியலூா் - செந்துறை புறவழிச்சாலையில் தோ்தல் பறக்கும் படை அலுவலா் மணிகண்டன் தலைமையிலான குழுவினா் திங்கள்கிழமை இரவு 10.30 மணியளவில் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, அவா்கள் அந்த வழியாக வந்த காரை மறித்து விசாரணை மற்றும் சோதனை மேற்கொண்டதில், செந்துறை அருகேயுள்ள புதுப்பாளையத்தைச் சோ்ந்த ராம்குமாா் என்பவா், உரிய ஆவணமின்றி ரூ.86 ஆயிரம் கொண்டு சென்றதும், அவை நகை விற்ற பணம் என்பது தெரியவந்தது. இருப்பினும் அந்த பணத்துக்கான உரிய ஆவணங்கள் இல்லாததால் அதனை தோ்தல் பறக்கும் படை அலுவலா்கள் பறிமுதல் செய்து, தோ்தல் நடத்தும் அலுவலா் பிரேமியிடம் ஒப்படைத்தனா்.