அரசு அலுவலர்களுக்கு பதவி உயர்வுக்காக நடத்தப்படும் துறை ரீதியான தேர்வை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய உறுப்பினர் எ.வி. பாலுசாமி மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் ச. சூர்யபிரகாஷ் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தனர்.
கரூர் மாவட்டத்தில் நகராட்சிக்குட்பட்ட பசுபதீஸ்வரா அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 22-ம் தேதி தொடங்கி வரும் 30-ம்தேதி வரை நடைபெற உள்ள தேர்வை ஆய்வு செய்து, தேர்வு எழுதுபவர்களுக்கு மேற்கொள்ளப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்தும், போக்குவரத்து வசதிகள் குறித்தும், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் தமிழ்நாடு அரசுப்பணியாளர்
தேர்வாணைய உறுப்பினர் எ.வி.பாலுசாமி விரிவாக கேட்டறிந்தார். மேலும், தேர்வு எழுதும் நபர்களிடம் வினாத்தாள் வடிவமைக்கப்பட்டுள்ள விதம் குறித்தும் தேர்வு எழுதுபவர்களுக்கு உள்ள சிரமங்கள் குறித்தும் கேட்டறிந்தார்.
பசுபதீஸ்வரா அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில் 2 அறைகள் தேர்வுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. தேர்வெழுத மொத்தம் 1,138 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
கரூர் வருவாய்க் கோட்டாட்சியர் கு. சரவணமூர்த்தி, வட்டாட்சியர்கள் ஈஸ்வரன், அம்பாயிரநாதன் உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









