தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

லாரி-கார் மோதல்: வேலாயுதம்பாளையத்தை சேர்ந்த 2 பேர் சாவு

ஈரோடு மாவட்டம், கொடுமுடி அருகே சாலைப்புதூரிலிருந்து கரூர் செல்லும் சாலையில் லாரி, கார் நேருக்குநேர் மோதிக்கொண்ட விபத்தில் காரில் பயணித்த இருவர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தனர்.

News image
Updated On :1 மார்ச் 2018, 2:46 am

DIN

ஈரோடு மாவட்டம், கொடுமுடி அருகே சாலைப்புதூரிலிருந்து கரூர் செல்லும் சாலையில் லாரி, கார் நேருக்குநேர் மோதிக்கொண்ட விபத்தில் காரில் பயணித்த இருவர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தனர்.
 கரூர் அருகே உள்ள வேலாயுதம்பாளையத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் (45). இவரது தந்தை பழனிசாமி, பெரியம்மா சுந்தராம்பாள் ஆகிய மூவரும் தங்களது காரில் ஊஞ்சலூர் அருகே உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றுவிட்டு, வேலாயுதம்பாளையத்துக்குத் திரும்பியுள்ளனர். 
சாலைப்புதூரிலிருந்து கரூர் செல்லும் சாலையில் வெள்ளைபாலம் அருகே சென்று கொண்டிருந்தபோது கரூரிலிருந்து தேங்காய் மட்டை ஏற்றிக் கொண்டு எதிரே வந்த லாரியின் வலதுபுறம் டயர் வெடித்து காரின் மீது மோதியுள்ளது. இதில், ரமேஷ், பழனிசாமி, சுந்தராம்பாள் ஆகிய மூவரும் பலத்த காயமடைந்தனர். இதையடுத்து, ஆம்புலன்ஸ் மூலமாக மூவரும் கொடுமுடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். சுந்தராம்பாள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் ரமேஷ் உயிரிழந்தார். பழனிசாமி காயங்களுடன் உயிர்தப்பினார்.
 இதுகுறித்து, கொடுமுடி காவல் துறை ஆய்வாளர் மணிகண்டன் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.