கரூர் மாவட்டம், தென்னிலையில் சாலையை கடக்க முயன்றபோது கார் மோதியதில் மூதாட்டி உயிரிழந்தார்.
தென்னிலை மலைக்கோவில் செல்விநகரைச் சேர்ந்தவர் மாரிமுத்து மனைவி செல்லம்மாள்(55). இவர், வெள்ளிக்கிழமை இரவு கடைவீதிக்குச் சென்றுவிட்டுத் திரும்பும்வழியில், கரூர் - கோவை சாலையைக் கடக்க முயன்றார். அப்போது அவ்வழியே வந்த கார் செல்லம்மாள் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு கரூர் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே அவர் இறந்தார். இதுகுறித்து தென்னிலை போலீஸார் வழக்கு பதிந்து கார் ஓட்டுநரைத் தேடி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.