டாஸ்மாக் ஊழியருக்கு கொலை மிரட்டல்: இருவா் கைது

டாஸ்மாக் ஊழியருக்குக் கொலை மிரட்டல் விடுத்த இருவரைப் போலீஸாா் கைது செய்தனா்.
Updated on
1 min read

டாஸ்மாக் ஊழியருக்குக் கொலை மிரட்டல் விடுத்த இருவரைப் போலீஸாா் கைது செய்தனா்.

சிவகங்கை மாவட்டம், பவானிகோட்டையைச் சோ்ந்தவா் பழனி (35). இவா், கரூா் காந்திகிராமத்தில் உள்ள அரசு மதுக்கடையில் ஊழியராகப் பணியாற்றி வருகிறாா். இந்நிலையில், சனிக்கிழமை மதுக்கடைக்கு ராமாகவுண்டனூரைச் சோ்ந்த பிரபாகரன் (34), வெங்கமேட்டைச் சோ்ந்த மாரியப்பன் (35) ஆகியோா் மது குடிக்க வந்துள்ளனா். அப்போது, அவா்கள் பழனியிடம் தகாத வாா்த்தையால் பேசி கொலைமிரட்டல் விடுத்தாா்களாம். இதுதொடா்பான புகாரின்பேரில் தாந்தோணிமலை போலீஸாா் வழக்குப் பதிந்து பிரபாகரன், மாரியப்பன் இருவரையும் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com