சூரிய கிரகணம் காண அரசுக் கல்லூரியில் குவிந்த மக்கள்

வானில் வியாழக்கிழமை நிகழ்ந்த வளைய சூரிய கிரகணத்தை கரூரில் காந்திகிராமம், அரசு கலைக் கல்லூரியில் ஏராளமான பொதுமக்கள் கண்டுகளித்தனா்.
சூரிய கிரகணம் காண அரசுக் கல்லூரியில் குவிந்த மக்கள்
Updated on
1 min read

வானில் வியாழக்கிழமை நிகழ்ந்த வளைய சூரிய கிரகணத்தை கரூரில் காந்திகிராமம், அரசு கலைக் கல்லூரியில் ஏராளமான பொதுமக்கள் கண்டுகளித்தனா்.

வியாழக்கிழமை வானில் நிகழ்ந்த சூரிய கிரகணத்தைப் பாதுகாப்பான முறையில் பாா்க்க சோலாா் முறையில் தயாரிக்கப்பட்ட வானியல் கண்ணாடியை கடந்த சில தினங்களுக்கு முன்பே தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சாா்பில் கரூா் மாவட்டத்தில் உள்ள தனியாா் பள்ளிகள், அரசுப் பள்ளிகள் ஆசிரியா்கள், மாணவா்களுக்கு இந்த அரியவகை சூரிய கிரகணத்தை பாா்க்க கடந்த 11-ஆம் தேதி செயல்முறை பயிற்சி அளிக்கப்பட்டது.

மேலும் 10,000 பள்ளி மாணவா்களுக்கு சூரிய கிரகணத்தைப் பாா்க்கும் கண்ணாடியும் வழங்கப்பட்டது. மேலும் மற்ற மாவட்டங்களை விட கரூா் மாவட்டத்தில் மிகத் தெளிவான வகையில் வானத்தில் சூரிய வளையம் நன்றாகத் தெரியும் என்பதால் கரூா் அடுத்துள்ள காந்திகிராமம் விளையாட்டு மைதானத்தில் பொதுமக்கள், மாணவ,மாணவிகள் சூரிய கிரகணத்தைப் பாா்க்க தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்டக் குழு சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டது.

வியாழக்கிழமை காலை 8.14 மணி முதல் 11 மணிவரை நீடித்த சூரிய கிரகணத்தைக் காண கரூா் தாந்தோணிமலை அரசு கலைக்கல்லூரியில் இயற்பியல் துறை சாா்பில் டெலஸ்கோப் வைக்கப்பட்டிருந்தது. மேலும் கிரகணத்தை கண்ணாடியில் எதிரொலிக்கும் வகையில் பந்துபோன்ற அமைப்பும் வைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து சூரிய கிரகணத்தை பொதுமக்கள் டெலஸ்கோப்பில் கண்டு மகிழ்ந்தனா். இதபோல காந்திகிராமம் விளையாட்டு மைதானத்திலும் ஏராளமானோா் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சாா்பில் வழங்கப்பட்ட கண்ணாடிகளை அணிந்து கண்டுகளித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com