கோவை நிதி நிறுவனத்துடன் குமாரசாமி கல்லூரி ஒப்பந்தம்

கரூர் எம். குமாரசாமி பொறியியல் கல்லூரி மேலாண்மைத் துறையும், கோவை நிதிநிறுவனமும் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன. 
Updated on
1 min read


கரூர் எம். குமாரசாமி பொறியியல் கல்லூரி மேலாண்மைத் துறையும், கோவை நிதிநிறுவனமும் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன. 
கரூர் எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரியின் மேலாண்மைத் துறையும், கோவை ஈ-கார்ப் பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனமும் அண்மையில்(ஏப். 29) புரிந்துணர்வு ஒப்பந்தம் புரியும் நிகழ்ச்சி கல்லூரியில் நடைபெற்றது.  நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் என்.ரமேஷ்பாபு தலைமை வகித்து, இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் முக்கியத்துவம், பயன்பாடு குறித்து விளக்கிப்பேசினார். நிகழ்ச்சியில், ஈகார்ப் நிறுவனத்தின் மேலாண்மை பங்குதாரர் சி.செந்தில்குமார் பங்குச் சந்தையில் லாபம் சம்பாதிப்பது எப்படி என்றும், இந்திய நிதி பங்குச்சந்தை மற்றும் அதன் நுட்பங்களை செயல்படுத்துவது குறித்து பேசினார்.  ஏற்பாடுகளை மேலாண்மைத்துறை தலைவர் முனைவர்பி.ஷியாம் சுந்தர் செய்திருந்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com