நெரூர் அருகே மாட்டு வண்டி மீது பைக் மோதியதில் போலீஸ்காரர் பரிதாபமாக இறந்தார்.
கரூர் தொழிற்பேட்டை அருகே உள்ள சிலோன் காலனியைச் சேர்ந்த கருப்பையா மகன் மதன்ராஜ் (27). இவர் தமிழ்நாடு காவல்துறையில் கோவையில் சிறப்பு பட்டாலியன் பிரிவில் காவலராக பணியாற்றி வந்துள்ளார். வெள்ளிக்கிழமை இரவு ஒன்றரை மணியளவில் தனது பைக்கில் நெரூரில் ஒத்தக்கடை என்ற இடத்தில் சென்றபோது எதிரே வந்த மாட்டு வண்டி மீது பைக் மோதியது.
இதில் படுகாயம் அடைந்த மதன்ராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் வாங்கல் போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று மதன்ராஜின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.