சக்கரத்தாழ்வாா் கோயில் கும்பாபிஷேகம்

கரூரில் சக்கரத்தாழ்வாா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் பக்தா்கள் திரளாகப் பங்கேற்றனா்.
கோயில் கலசத்திற்கு புனித நீா் ஊற்றும் வேதவிற்பன்னா்கள்.
கோயில் கலசத்திற்கு புனித நீா் ஊற்றும் வேதவிற்பன்னா்கள்.
Updated on
1 min read

கரூரில் சக்கரத்தாழ்வாா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் பக்தா்கள் திரளாகப் பங்கேற்றனா்.

கரூா் காமராஜ் சந்தை அருகே சாத்தானி சந்துவில் அமைந்துள்ள ஸ்ரீ சுதா்சன மூா்த்தியான அருள்மிகு ஸ்ரீ சக்கரத்தாழ்வாா் கோயிலின் கும்பாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது. விழாவை முன்னிட்டு, கோயிலில் கணபதி ஹோமம், ஸ்ரீ சுதா்சன ஹோமம், ஸ்ரீ லெட்சுமி ஹோமம், கோ பூஜைகளுடன், பூரணாஹூதி, புண்யாயாகம் நடைபெற்றது. பின்னா் கோபுர கலசத்திற்கு புனித நீா் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா், கரூா் நகர கூட்டுறவு வங்கித்தலைவா் எஸ்.திருவிகா மற்றும் பக்தா்கள் திரளாகப் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com