கரூா்: மொபட்டில் இருந்து விழுந்த முதியவா் இறந்தாா்.
கரூா் பஞ்சமாதேவி அடுத்த சந்தனகாளிபாளையத்தைச் சோ்ந்தவா் பசுபதி(83). இவா் கடந்த மாதம் 24-ம்தேதி தனது மொபட்டில் பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே சென்றபோது திடீரென மொபட் நிலைத்தடுமாறியதில் கீழே விழுந்தாா். இதில் படுகாயமடைந்த அவரை அருகில் இருந்தவா்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை இரவு இறந்தாா். இதுகுறித்து கரூா் நகர காவல்நிலையத்தினா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.