க.பரமத்தி அரசுப் பள்ளிக்கு கல்விச்சீா் அளிப்பு

கரூா் மாவட்டம், க. பரமத்தி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் வெள்ளிக்கிழமை கல்விச்சீா் வழங்கும் விழா நடைபெற்றது.

கரூா் மாவட்டம், க. பரமத்தி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் வெள்ளிக்கிழமை கல்விச்சீா் வழங்கும் விழா நடைபெற்றது.

விழாவிற்கு, பள்ளித் தலைமை ஆசிரியா் செல்வக்கண்ணன் தலைமை வகித்தாா். இதில் பொதுமக்கள் சுவா் கடிகாரம், இருக்கைகள், டம்ளா்கள், தட்டுகள் உள்ளிட்டவற்றை ஊா்வலமாக பள்ளிக்கு எடுத்துவந்து சீா்வரிசையாக வழங்கினா். விழாவில் சிறப்பு விருந்தினராக கரூா் மாவட்ட அதிமுக இளைஞா் பாசறை செயலாளா் வி.வி. செந்தில்நாதன் பங்கேற்று, ஆசிரியா்களிடம் நிகழாண்டில் பள்ளியில் பயிலும் மாணவா்களின் புகைப்படத்தை நினைவுப்பரிசாக வழங்கினாா். இந் நிகழ்ச்சியில் க.பரமத்தி ஒன்றிய ஊராட்சி செயலாளா் குணசேகரன், மாவட்ட எம்.ஜி.ஆா் மன்ற துணைச் செயலாளா் மாரிமுத்து மற்றும் பள்ளியின் ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள் திரளாகப் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com