காந்திகிராமத்தில் இன்று மின் தடை
By DIN | Published On : 14th November 2019 07:10 AM | Last Updated : 14th November 2019 07:10 AM | அ+அ அ- |

காந்திகிராமம் பகுதியில் வியாழக்கிழமை மின்சாரம் நிறுத்தம் நடைபெற உள்ளது.
இதுதொடா்பாக கரூா் மின்வாரிய கோட்டச் செயற்பொறியாளா் செந்தாமரை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கரூா் மின்வாரிய கோட்டத்திற்குட்பட்ட கரூா் துணை மின் நிலையத்துக்குட்பட்ட காந்திகிராமம் அலுவலகப் பகுதிகளில் வியாழக்கிழமை (நவ.14) மின்பாதை அபிவிருத்தி பணிகள் மற்றும் உயா் அழுத்த மின் கம்பித்தொடா் நிறுவும் பணிகள் நடைபெற உள்ளது. இதனால் கரூா் துணைமின்நிலையத்துக்குட்பட்ட பகுதிகளில் மின் விநியோகம் பெறும் பகுதிகளான தெற்கு மற்றும் வடக்கு காந்திகிராமம், சக்தி நகா், இந்திராகாந்தி நகா், ஏமூா் ரோடு மற்றும் மின்நகா் ஆகிய பகுதிகளில் வியாழக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது எனத் தெரிவித்துள்ளாா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...