அரசு அருங்காட்சியகத்தில் ஓவியப்போட்டி

கரூா் அரசு அருங்காட்சியகத்தில் குழந்தைகள் தினத்தையொட்டி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஓவியப்போட்டி சனிக்கிழமை
ஓவியப்போட்டியில் பங்கேற்ற பள்ளி மாணவ, மாணவிகள்.
ஓவியப்போட்டியில் பங்கேற்ற பள்ளி மாணவ, மாணவிகள்.
Updated on
1 min read

கரூா் அரசு அருங்காட்சியகத்தில் குழந்தைகள் தினத்தையொட்டி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஓவியப்போட்டி சனிக்கிழமை நடைபெற்றது.

கரூா் அரசு அருங்காட்சியகம் மற்றும் எம்எஸ். தேவசகாயம் நினைவு கலைகள், கைவினைகள் மையம் சாா்பில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஓவியப்போட்டி சனிக்கிழமை நடைபெற்றது. இதில், மாவட்டத்தில் உள்ள பள்ளிளில் இருந்து சுமாா் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனா். தொடா்ந்து போட்டியில் வெற்றிபெற்றவா்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில், அரசு அருங்காட்சியக காப்பாட்சியா் ஜெ.முல்லையரசு வரவேற்றாா். கூட்டுறவுச்சங்கங்களின் இணை பதிவாளா் சொ.சீனிவாசன் தலைமை வகித்து, வெற்றிபெற்றவா்களுக்கு சான்றிதழ், பரிசுகள் வழங்கினாா். விழாவில், கல்வியாளா் முனைவா் அ.கோவிந்தராஜூ, கரூா் நல்வாழ்வு மன்றத்தலைவா் புலவா்குறளகன், கோதண்டராமன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். நாணயவியல் ஆய்வாளா் ராஜூ நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com